நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்.....

ஆய்வுகள் | மற்றவை by - அபூ தல்ஹா முஹம்மது மஷாரிக் On Aug 23, 2023 Viewers: 271


நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்.....

நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்.....


   - அபூ தல்ஹா முஹம்மது மஷாரிக் 


கணவன் மனைவியாக நெருக்கமாக வாழும் தருணம் ஒரு குறிப்பிட்ட வயது வரம்புகளோடு முடிந்து போவதை பலரது வாழ்விலும் நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக 45 அல்லது 50 வயதை தாண்டி விட்ட தம்பதிகள், பேச்சில் உறவாடுவதோடு தமது நெருக்கங்களை சுருக்கிக் கொள்கிறார்கள். அந்த வயதில் எவரேனும் நெருக்கமாக இருந்து விட்டால், அதை ஒரு அசவுகரியமான செயலாக நமது சமூகமும் பார்க்கத் துவங்கியுள்ளது. இரண்டு மூன்று பிள்ளைகள் என்று ஆகிவிட்டன, பிள்ளைகளும் பெரிய பிள்ளைகள் ஆகிவிட்டனர் இதற்கு மேல் நாம் நெருங்கி அமர்வது கூட தவறான செயல் ஆகிவிடும் என்று தமக்குத் தாமே வரம்புகளை கட்டமைத்து வாழத் துவங்கி விடுகின்றனர். இதுவெல்லாம் இஸ்லாமிய வழிகாட்டலில் தவறானவை ஆகும்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் நமது ஒட்டுமொத்த வாழ்விற்கான முன்மாதிரி. அன்னார் தமது 40வது வயதுக்கு பின்னர் தான் நபித்துவப் பணிகளைத் துவங்கினார்கள். அதற்கு பின்னர் தான் நபியின் செய்திகளை பல நபித் தோழர்களும் அறிவிக்கத் துவங்கினர். அதில் அவர்களது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களும் ஒருவர். நபியின் குடும்ப வாழ்வு எவ்வளவு இனிமையானவை என்பதை பல செய்திகள் நமக்கு பறைசாற்றுகிறது.


ஆயிஷா (ரலி) அவர்கள் உணவு உட்கொள்ளும் போது இறைச்சியைக் கடித்தார்கள் என்றால், அவர்கள் எங்கு கடித்தார்களோ அதே இடத்தில் வாய் வைத்து நபிகளார் (ஸல்) அவர்கள் கடிப்பார்கள்.


பாலைவனத் திடலில் மக்கள் வீர விளையாட்டுக்களில் ஈடுபடும்போது, தம் கணவர் நபிகளாரின் தோள்மீது, தமது தாடையை நிறுத்தி வைத்தவர்களாக அந்த விளையாட்டை ஆயிஷா (ரலி) அவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள்.


நபிகளார் சென்ற போர்க்களங்களுக்கு, தமது மனைவிமார்களில் யாரேனும் ஒருவரை தம்மோடு அழைத்து செல்வார்கள், அதற்காக வேண்டி நபியின் மனைவியர் தம்மை அலங்கரித்து கொள்வார்கள். 


நபிகளார் (ஸல்) அவர்கள் தமது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களை ஆயிஷ் என்று செல்லப் பெயரிட்டு அழைப்பார்கள்.


ஆயிஷா (ரலி) அவர்களோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றாக குளித்திருக்கிறார்கள்.


ஆயிஷா (ரலி) அவர்களோடு நபிகளார் (ஸல்) அவர்கள் ஓட்டப்பந்தயம் வைத்து விளையாடியுள்ளார்கள்.


நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவர்களது வயது 63. தமது 63வது வயதிலும் கூட, தம் ஆருயிர் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களின் நெஞ்சில் சாய்ந்த வண்ணம் தான் அவர்களது உயிர் பிரிந்தது என்பது வரலாறு.


தமது நெஞ்சில் படுத்த வண்ணம் இயலாமையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தம் கணவர் நபிகளார் (ஸல்) அவர்களுக்கு, தமது கரத்தால் ஆயிஷா (ரலி) அவர்கள் மிஸ்வாக் செய்து விட்டார்கள். இது போன்று பல உதாரணங்களை நாம் நபிமொழிகளில் படிக்கலாம்.


இவைகளெல்லாம் ஏதோ நபியும், நபிகளாரின் மனைவியும் புதுமணத் தம்பதிகளாக இருக்கும்போது செய்தவை அல்ல. அவர்கள் திருமணம் முடித்து வாழ்ந்த பல்வேறு சந்தர்ப்பங்களில் அதாவது இறுதி காலம் வரை நடந்தேறிய நிகழ்வுகள் ஆகும். இதுதான் இஸ்லாம் கூறும் சரியான புரிந்துணர்வுள்ள வாழ்வாகும்.


குழந்தைகள் என்று ஆகிவிட்ட பின், கணவன் மனைவி தமது படுக்கைகளைப் பிரித்துக் கொள்வது. ஒன்றாக அமர்ந்து பேச வெட்கப்படுவது. கனவனுக்கு நேரம் ஒதுக்கி அவரது இன்ப துன்பங்களில் பங்கெடுக்க இயலாமல் ஒரேடியாக ஒதுங்கி விடுவது, தமது சிறு பிள்ளைகளின் முன்பு கூட அன்பாய் முத்தமிட்டுக் கொள்வதை அருவருப்பாக எண்ணுவது, இப்படி பல வகைகளில் நமது திருமண வாழ்க்கை 40 வயதை தாண்டும்போதே முடிவுக்கு வந்து விடுகிறது. 


இவ்வாறான வாழ்க்கை அமைதியைத் தரும் வாழ்க்கையாக இருக்காது. இவ்வாறான வாழ்க்கையில் தொடர் பிரிவுகள் தான் அதிகரிக்குமே தவிர அன்பு அதிகரிக்கவே செய்யாதுஎன்பதை தம்பதிகள் புரிந்து செயல்பட வேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் கணவன் மனைவி என்ற பந்தத்தில் பிளவுகள் அதிகரித்து விடக்கூடாது. அதையே ஷைத்தான் விரும்புகிறான். கணவன் மனைவியாக பரஸ்பரம் அன்பு செலுத்திக் கொள்வதை, வெட்கப் புன்னகையோடு ஓரக்கண்ணில் பார்க்கும் நம் பிஞ்சுக் குழந்தைகளுக்கு, இதுதான் நேசமிக்க வாழ்வின் அடையாளம், இதுதான் சுன்னாஹ் என்பதை பதிய வையுங்கள்! நாளை அவர்களது வாழ்வும் நேசமிக்க வாழ்வாக அமையும் இன்ஷா அல்லாஹ்!


இதனை எழுதும்போது எனக்கு தோன்றிய ஒரு சிந்தனையை இறுதியாகப் பதிவு செய்துவிட்டு முடித்துக் கொள்ள விரும்புகிறேன். மறுமையில் அல்லாஹ் பார்க்காத, பேசாத, பரிசுத்தப்படுத்தாத, கடுமையாக வேதனை செய்யப்படும் நபர்களில் ஒருவர் "விபச்சாரம் செய்யும் முதியவர்" ஆவார். பெண்களுக்கு இயல்பில் வயோதிபத்தைத் தொடும் ஆரம்பத்திலேயே இல்லற வாழ்வின் சிந்தனை அற்றுப்போவதைப் போல் (அல்லாஹ் நாடியவர்களைத் தவிர), ஆண்களில் பலருக்கும் அவ்வாறு ஆவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். விதிவிலக்காகவும் பலர் இருக்கலாம். (அல்லாஹ்வே மிக அறிந்தவன்) எந்தப் பருவமாக இருந்தாலும், அது ஹலாலான உறவைக் கொண்டே முழுமைப் பெற வேண்டும். அதையே அல்லாஹ் விரும்புகிறான். ஆக, பெண்களால் தமது இயலாமைக் காலத்தில் முழுமையாக இல்லற வாழ்வில் ஈடுபட இயலவில்லை என்றாலும், தமது கணவர் தவறான செயலுக்கு சென்று விடுவதை அவர்கள் அஞ்ச வேண்டும். தம்மால் இயன்ற ஒத்துழைப்பை அவர்கள் நல்க வேண்டும். அதுவே அவர்களைப் பாதுகாக்கும்.


அல்லாஹ்வே மிக அறிந்தவன்!!

***

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE